காங்கிரஸ் கட்சி இந்தியாவில் முதல் கட்சியாக உள்ளது. தமிழகத்தில் முதல் கட்சியாக இல்லை என்ற ஆதங்கம் எங்களுக்கு உள்ளது. தமிழகத்தில் திராவிட கட்சிகளான அதிமுக, திமுக ஆகியவை ஆளுமையில் உள்ளது. இருந்தாலும் தமிழ்நாடும், தமிழக மக்களும் தேசிய நீரோட்டத்திலிருந்து விலகி சென்றுவிடக்கூடாது. அன்னிய நாட்டு கொள்கையாக இருந்தாலும் சரி, தேசப் பாதுகாப்பு கொள்கையாக இருந்தாலும் சரி, பொருளாதாரக் கொள்கையாக இருந்தாலும் சரி, காங்கிரஸ் கட்சி எடுக்கும் நிலைதான் இந்தியாவிற்கு நல்லது. அதுதான் தமிழ்நாட்டிற்கும், மற்ற மாநிலங்களுக்கும் நல்லது. தமிழ்நாடு தனி முடிவெடுத்தால் அது நல்லதல்ல. உலக நாடுகள் வகுக்கக்கூடிய அன்னிய நாட்டு கொள்கையை அனுசரித்து, அதை உணர்ந்து, ஆராய்ந்து பார்த்துதான் நமது அன்னிய நாட்டு கொள்கையை உருவாக்கி கொள்ள முடியும்.