அண்ணாமலைநகர் பூமா கோயில் முன்பு ஈழத்தமிழர் பாதுகாப்பு மாணவர் கூட்டமைப்பு மற்றும் மாணவர் விடுதலை இயக்கம் சார்பில் நீதிவள்ளல் தலைமையில் மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து இந்தியஅரசு எவ்வித நடவடிக்கை இல்லை. எனவே சுதந்திரதினத்தை கறுப்பு தினமாக அனுஷ்டிப்பதாக கூறி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த டிஎஸ்பி ஆர்.ராஜாராம், அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.உதயகுமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக மாணவர்கள் 26 பேரை கைது செய்தனர். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் சுதந்திரத்தினத்தையும், தேசியக்கொடியையும் அவமதித்ததாக வழக்குப் பதிந்துள்ளனர்.