தகவல் அறிந்த கடலூர் மாவட்ட சுகாதார துணை இயக்குநர் ஜவகர்லால்பாபு, வட்டாட்சியர் வெங்கடாசலம் ஆகியோர் அக்கிராமத்திற்கு சென்று உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர். வட்டார மருத்துவ அலுவலர் சிவானந்தம் தலைமையில் மருத்துவக்குழுவினர் கிராமத்தில் முகாமிட்டு அனைவருக்கும் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இத்திருவிழாவில் பங்கேற்று கஞ்சி குடித்த வாந்தி, பேதி ஏற்பட்ட அரியலூர் மாவட்டம் வானவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 50 பேர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.