புதுச்சேரி கப்பல்படை கமாண்டிங் அதிகாரி சுபாஷ்சந்திரா பங்கேற்று பேசினார். அவர் பேசுகையி்ல் "தீவிரவாதிகள் ஊடுருவாமல் இருக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் தேவை" என சுபாஷ்சந்திரா தெரிவித்தார். கூட்டத்தில் புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், மீன்வளத்துறை ஆய்வாளர் சுகுமார், சுங்கத்துறை அதிகாரி, கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜி, செல்வம், வீரபாண்டியன், இளங்கோவன், வெங்கடேசன், சந்திரசேகரன், ஆளவந்தார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரபோஸ் நன்றி கூறினார். கூட்டத்தில் சாமியார்பேட்டை, தா.சோ.பேட்டை, முடசல்ஓடை உள்ளிட்ட கடலோர கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர்.