மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

பணம் கையாடல் செய்த கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 2 பேர் கைது

சிதம்பரம் கோட்ட அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்தில் பணம் கையாடல் நடந்ததாக புகார் எழுந்தது.அதைத் தொடர்ந்து கூட்டுறவுச் சங்க அதிகாரிகள்

Updated On :24 ஆகஸ்ட் 2013, 12:35 pm

பணியாளர்கள் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் பணம் கையாடல் செய்ததாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.

சிதம்பரம் கோட்ட அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்தில் பணம் கையாடல் நடந்ததாக புகார் எழுந்தது.அதைத் தொடர்ந்து கூட்டுறவுச் சங்க அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் ஊழியர்கள் மூவரும், சங்க உறுப்பினர்கள் இருவர் என ஐந்து பேரும் சேர்ந்து ரூ.32 லட்சத்து 80 ஆயிரத்து 881 கையாடல் செய்தது தெரிந்தது.இது குறித்து கடலூர் வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸில் புகார் செய்யப்பட்டது.அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சங்க உறுப்பினர்கள் வேல்முருகன் (50), அசோகன் (48) ஆகியோரை கடந்த 22-ஆம் தேதி கைது செய்தனர்.

மேலும் ஊழியர்கள் இருவரையும், ஓய்வுபெற்ற ஊழியர் ஒருவரையும் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.