சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

கட்டிடத் தொழிலாளி கொலை - இளைஞர் கைது

குடி போதையில் இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறில் கட்டிடத் தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இளைஞரை போலசார் கைது செய்தனர்.

Updated On :26 ஆகஸ்ட் 2013, 6:00 pm

குடி போதையில் இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறில் கட்டிடத் தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இளைஞரை போலசார் கைது செய்தனர்.

  அருப்புகோட்டை ராமசாமிபுரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (48). இவரும் இதே ஊரைச் சேர்ந்த ரகுவரன் (26) மற்றும் மேலும் 10 பேர் சிவகங்கை மாவட்டம் பையூரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து கட்டிடப் பணிகளை செய்து வருகின்றனர்.

 இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு குடிபோதையில் இருந்த மாரிமுத்து-ரகுவரனுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த ரகுவரன் கல்லால் மாரிமுத்துவைத் தாக்கினாராம். இதனால் சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்தார். இது குறித்து சிவகங்கை நகர் போலீசார் திங்கள்கிழமை ரகுவரனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ரகுவரனுக்கு சந்திரா என்ற மனைவியும், தர்மேந்திரா(10) என்ற மகனும் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.