தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

போலீஸ் எஸ்.ஐ யை கண்டித்து வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு

மானாமதுரை நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றும் ராம்நாத் இங்குள்ள சிப்காட் காவல் நிலையத்துக்குச் சென்றபோது அங்கு பணியிலிருந்த எஸ்.ஐ தவமுனி வழக்குரைஞர் ராம்நாத்தை அவதூறாக

News image
Updated On :26 ஆகஸ்ட் 2013, 11:37 am

யுகன்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் போலீஸ் எஸ்.ஐ யை கண்டித்து திங்கள்கிழமை வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

மானாமதுரை நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றும் ராம்நாத் இங்குள்ள சிப்காட் காவல் நிலையத்துக்குச் சென்றபோது அங்கு பணியிலிருந்த எஸ்.ஐ தவமுனி வழக்குரைஞர் ராம்நாத்தை அவதூறாக பேசினாராம். இதையடுத்து மானாமதுரை வழக்குரைஞர்கள் சங்கத்தில் எஸ்.ஐ தவமுனியைக் கண்டித்து நீதிமன்றப் பணிகளை புறக்கணிக்க முடிவு செய்தனர். அதன்படி மானாமதுரை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களின் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். இதனால் இந் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் நடைபெறாமல் பணிகள் பாதிக்கப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.