காட்டில் இருந்த போது அவற்றுக்கு இருந்த பழக்க வழக்கங்கள் மாறியுள்ளது. தற்போது, பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் நடமாடுவது, சாலையில் நடமாடுவது என்று கட்டற்று சுற்றி வருகின்றன. இதனால், விவசாயிகளுக்கு இழப்பு அதிகம் ஏற்படுகிறது. எனவே, யானைகளைப் பிடிப்பதற்கு ஆப்பரேஷன் மலை என்ற திட்டத்தினை தீட்டியுள்ளோம். இதற்காக, அரசு 73 லட்ச ரூபாய் ஒதுக்கியுள்ளது. இவற்றைப் பிடித்து, ஆனைமலை முதுமலை காடுகளில் விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை இவற்றைப் பிடிப்பதற்கு முயற்சி செய்தோம். ஆனால், முடியவில்லை. யானைகள் 4-ம் 2-மாகப் பிரிந்து சென்றன.