ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மயிலாடுதுறை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: சோதனை

மயிலாடுதுறை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு கடிதம் வந்ததால், வளாகத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2013, 6:08 am

சங்கர்

மயிலாடுதுறை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு கடிதம் வந்ததால், வளாகத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

மயிலாடுதுறை நீதிமன்றத்துக்கு ஏற்கெனவே பாங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துவந்ததால், தாக்குதல் எச்சரிக்கை செய்திருந்தனர்.

இந்நிலையில், மயிலாடுதுறை முதன்மை சார்பு நீதிபதிக்கு ஒரு மர்ம கடிதம் வந்தது. அதில், ஒரு பெண் மனித வெடிகுண்டு மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஊடுருவியுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதை அடுத்து, எல்லா வழக்குகளும் ஒத்திவைக்கப்பட்டு அனைவரும் வெளியேற்றப் பட்டனர். இதன் பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருப்பதால், வளாகத்தில் செயல்பட்ட ஏழு நீதிமன்றங்கள் மகாதானத் தெருவில் உள்ள அம்பாபாய் திருமணமண்டபம், எம்.ஆர்.பி. திருமண மண்டபம் ஆகிய 2 திருமண  மண்டபங்களில் தாற்காலிகமாக செயல்பட்டு வருகின்றன. இந்த 7 நீதிமன்றப் பணிகளும் நிறுத்திவைக்கப்பட்டு சோதனை நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.