தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாளையங்கோட்டையில் பெண் கொலை

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இவ் வளாகத்தில் புதிதாக ஒரு அறை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அப் பகுதியில் பிச்சையெடுக்கும் ஒரு பெண் வழக்கமாக

News image
Updated On :1 டிசம்பர் 2013, 11:59 am

முத்துகுமார்

பாளையங்கோட்டையில் பெண்ணை கொலை செய்த மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இவ் வளாகத்தில் புதிதாக ஒரு அறை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அப் பகுதியில் பிச்சையெடுக்கும் ஒரு பெண் வழக்கமாக இந்தக் கோவில் வளாகத்தில் இரவில் தூங்குவாராம்.இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் அந்தப் பெண் இறந்துகிடந்தார். தகவலறிந்ததும் பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர் ராஜமன்னார், காவல் ஆய்வாளர் பிரான்சிஸ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்ணின் உடலில் பல்வேறு இடங்களிலும் காயங்கள் உள்ளன. குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.