ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நகரமன்றக் கூட்டம் நடத்த தலைவி மறுப்பு:  வி.கே. புரத்தில் துணைத்தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி

விக்கிரமசிங்கபுரத்தில் நகர்மன்ற கூட்டம் நடத்த தலைவி மறுத்து வருவதை அடுத்து துணைத்தலைவர் தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வார்டு வார்டாக மக்களை சந்தித்து குறைகள் கேட்கும் நிகழ்ச்சி

News image
Updated On :3 டிசம்பர் 2013, 11:26 am

ஷேக் அப்துல்காதர்

விக்கிரமசிங்கபுரத்தில் நகர்மன்ற கூட்டம் நடத்த தலைவி மறுத்து வருவதை அடுத்து துணைத்தலைவர் தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வார்டு வார்டாக மக்களை சந்தித்து குறைகள் கேட்கும் நிகழ்ச்சி திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றது.

விக்கிரமசிங்கபுரம் நகர்மன்றத் தலைவி இ. மனோன்மணி (அதிமுக). துணைத் தலைவர் தி. கணேசபெருமாள் (அதிமுக). தலைவி மற்றும் துணைத் தலைவர், அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 மாதங்களாக நகர்மன்றம் கூட்டம் நடத்தப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.நகர்மன்றக் கூட்டம் நடத்தாத காரணத்தால் நகரில் குடிநீர் மற்றும் தெருவிளக்கு  போன்ற அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவதில் தேக்க நிலை நீடிப்பதாக புகார் கூறப்படுகிறது. நகரில் பல்வேறு வார்டுகளில் மின்விளக்குகள் எரியாதால் இருளில் மூழ்கி இருப்பதாக பொதுமக்கள், எதிர்கட்சி உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.

மக்கள் பிரச்னைகள் குறித்து விவாதிக்க நகர்மன்ற கூட்டத்தினை கூட்டுமாறு கோரிக்கை விடுத்தும் தலைவி, நகர்மன்ற கூட்டம் நடத்தவில்லை என ஆட்சேபம் தெரிவித்து நகரில் சுவரொட்டி, பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டன.இதனிடையே நகரில் நிலவும் குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட மக்கள் பிரச்னைகளை துணைத் தலைவர் தி. கணேசபெருமாள் தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வருகின்றனர். திங்கள்கிழமை நகர்மன்ற 4,10 மற்றும் 15 வது வார்டு மக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.

செவ்வாய்க்கிழமை நகர்மன்ற 20, 21 மற்றும் 1 ஆவது வார்டுகளுக்கு சென்று மக்கள் சந்தித்து குறைகளை அவர்கள் கேட்டறிந்தனர். இதில் துணைத் தலைவருடன், நகர்மன்ற உறுப்பினர்கள் தவசு, ஆபரகாம், பாலகிருஷ்ணன், சக்திவேல், ஆர். ஜெயலட்சுமி, டி. ஜெயலட்சுமி, இசக்கியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.