ரூ. 4 லட்சம் நகை, பணம் திருட்டு: கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் தனியார் ஓடு தொழிற்சாலை பணியாளர் வீட்டில் ரொக்கப் பணம் ரூ. 1 லட்சம், ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகளை திருடிய பொறியியல் மாணவர், அவரது தாயார் மற்றும் 2 பெண்களை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.










