கடையம் ஊரின் மேற்கு பகுதியில் இராம நதி அணைக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது நித்ய கல்யாணி அம்மன் திருக்கோயில். இந்தக் கோயில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னனால் கட்டப்பட்டதாகும். இது தமிழ் நாடு அரசு இந்து அற நிலையத் துறையின் கீழ் இயங்கும் கோயில் ஆகும். இந்தக் கோயிலில் கிழக்கு வாசல் பகுதியில் ஒரு அழகான தெப்பக்குளம் உள்ளது. இதில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் தெப்பத் திருவிழா நடைபெறும். ஆனால் கடந்த ஆண்டு தெப்பக் குளத்தின் கீழ்பக்கச் சுற்றுப்பாதை இடிந்து விழுந்தது. இதனால் இந்த ஆண்டு ஆவணி மாதம் தெப்பத் திருவிழா நடைபெறவில்லை.