தேரோட்டத்தின் போது மக்கள் வீதிகளில் தங்களது வீட்டிற்கு முன்பு தேர்களை நிறுத்தி ஸ்ரீநடராஜமூர்த்தி, ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளுக்கும் பட்டு, மாலை சாற்றி, நிவேத்தியம் செய்து மண்டகப்படி பூஜை செய்வது தொன்று, தொட்டு நடைபெற்றும் வரும் பாரம்பரியமாகும். அதிகாரிகளின் வற்பறுத்தலினால் இம்முறை தேர்கள் மண்டகப்படிக்கு நிறுத்தாமல் சென்றதால் மக்கள் வேதனையும், ஏமாற்றமும் அடைந்தனர். எனவே பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகம் உடனடியாக வருகிற ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவத்திற்குள் தேர்களை செப்பணியிட்டு சீரமைத்து தரவேண்டும் என உ.வெங்கடேச தீட்சிதர் தெரிவித்தார்.