அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகரில் சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முத்துச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட மாவட்ட இணைச் செயலாளர்

News image
Updated On :19 டிசம்பர் 2013, 2:04 pm

விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப்பணியாளர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    விருதுநகர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முத்துச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட மாவட்ட இணைச் செயலாளர் கோட்டைச்சாமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் வைரவன் விளக்கவுரை நிகழ்த்தினார்.

   இதில், 41 மாத காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். மாதந்தோறும் சம்பளத்தை கருவூலம் மூலம் வழங்க வேண்டும் மற்றும் வாரிசுதாரர் பணிநியமனத்தை எந்திவிதமான நிபந்தனையும் இல்லாமல் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சாலைப்பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.