ஆதார் அட்டை இருந்தால் கேஸ் இணைப்பிற்கு மானிய விலையில் சிலிண்டர் என கேஸ் ஏஜென்சிகள் அறிவித்துள்ளது. ஆதார் அட்டை பதிவு செய்யாதவர்களுக்கு மானிய விலையில் சிலிண்டர் கிடையாது என கேஸ் ஏஜென்சியினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சிதம்பரம் வட்டத்தில் ஆதார் அட்டை வழங்கும் பணி முழுமை பெறாமல் உள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஏனென்றால் கடந்த 6 மாதங்கள் முன்பு நகரில் வார்டு வாரியாகவும், கிராமங்கள் வாரியாகவும் குறிப்பிட்ட தேதிகளில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்றது. அன்றைய தினம் ஊரில் இல்லாதவர்கள் படம் எடுக்க முடியாமல் போனது. இதனால் சிதம்பரம் வட்டத்தில் 50 சதவீதத்திற்கு மேல் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்காமல் உள்ளனர்.