சென்னையைச் சேர்ந்தவரிடம் ஒப்பந்த அடிப்படையில் சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து ரூ.8.50 லட்சம் மோசடி செய்த ஒருவரை சிதம்பரம் நகர போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவரிடமிருந்து 4 கார்களை பறிமுதல் செய்தனர்.
சென்னை தி்ருவெற்றியூரைச் சேர்ந்த கண்ணன் (48). இவர் நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அகமது (42) என்பவரிடம் தனது 4 சொகுசு கார்களை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விட்டுள்ளார். கார்களை அகமது சிதம்பரம் பஸ்நிலைய ஸ்டேன்டில் நிறுத்தி வாடகைக்கு விட்டு வந்துள்ளார்.
ஆனால் கடந்த 3 மாதமாக அகமது வாடகை பாக்கி ரூ.8.50 லட்சத்தையும் கொடுக்கவில்லை. கார்களை திருப்பிக் கேட்டபோது கார்களையும் கொடுக்கவில்லை. பின்னர் இதுகுறித்து கண்ணன் சிதம்பரம் நகருக்கு வந்து விசாரித்த போது மேற்கொண்ட போது அகமது கார்களை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளது தெரியவந்தது.
இந்த மோசடி குறித்து கண்ணன் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு அகமதை கைது செய்து, 4 கார்களையும் பறிமுதல் செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது
சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து

சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

