தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

ஒப்பந்த அடிப்படையில் கார்களை வாடகைக்கு எடுத்து ரூ.8.50 லட்சம் மோசடி: ஒருவர் கைது

சென்னையைச் சேர்ந்தவரிடம் ஒப்பந்த அடிப்படையில் சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து ரூ.8.50 லட்சம் மோசடி செய்த ஒருவரை சிதம்பரம் நகர

Updated On :27 டிசம்பர் 2013, 1:53 pm

சென்னையைச் சேர்ந்தவரிடம் ஒப்பந்த அடிப்படையில் சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து ரூ.8.50 லட்சம் மோசடி செய்த ஒருவரை சிதம்பரம் நகர போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவரிடமிருந்து 4 கார்களை பறிமுதல் செய்தனர்.

சென்னை தி்ருவெற்றியூரைச் சேர்ந்த கண்ணன் (48). இவர் நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அகமது (42) என்பவரிடம் தனது 4 சொகுசு கார்களை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விட்டுள்ளார். கார்களை அகமது சிதம்பரம் பஸ்நிலைய ஸ்டேன்டில் நிறுத்தி வாடகைக்கு விட்டு வந்துள்ளார்.

ஆனால் கடந்த 3 மாதமாக அகமது வாடகை பாக்கி ரூ.8.50 லட்சத்தையும் கொடுக்கவில்லை. கார்களை திருப்பிக் கேட்டபோது கார்களையும் கொடுக்கவில்லை. பின்னர் இதுகுறித்து கண்ணன் சிதம்பரம் நகருக்கு வந்து விசாரித்த போது மேற்கொண்ட போது அகமது கார்களை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளது தெரியவந்தது.

இந்த மோசடி குறித்து கண்ணன் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு அகமதை கைது செய்து, 4 கார்களையும் பறிமுதல் செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.