இதுகுறித்து கூட்டமைப்பு நிர்வாகிகள் ரா.உதயசந்திரன், சி.மதியழகன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: வரும் கல்வி ஆண்டில் பிஇ., எம்இ., பி.எஸ்.சி விவசாயம்., எம்.பி.ஏ., எம்பிபிஎஸ், எம்டி., பிடிஎஸ், எம்டிஎஸ்., ஆகிய படிப்புகளுக்கு மதிப்பெண் பட்டியல் அடிப்படையில் மட்டுமே மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட வேண்டுமென என ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்கான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் எவரிடமும் முன்பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி சேர்க்கை அளிக்க மறுத்தால் கூட்டமைப்பிடம் முறையிட கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.