திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர்- ராதாபுரம் அருகே சங்கநேரி பகுதியில் சாலையில் சென்ற டெம்போ வேன் ஒன்று திடீரெனக் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. அதில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அவர்களில் 2 பேர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இந்த விபத்தில் அந்தக் கல்லூரிப் பணியாளர் ஒருவர் உள்பட 14 பேர் காயம் அடைந்தனர்.