யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஸ்ரீவிலி. அருகே ஒருரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒருவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர்

News image
Updated On :10 பிப்ரவரி 2013, 6:16 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒருவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பெரியசாமியை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேலக்கோட்டையூர், மேலத்தெரு, பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியத் தேவர் மகன் மாரிமுத்து (29). இவர் சனிக்கிழமை இரவு தனது கணினி கடையை அடைத்துவிட்டு, தனது தந்தையின் கடை முன்பு நின்று கொண்டிருந்தாராம்.

அப்போது அங்கு மேலக்கோட்டையூர், பெருமாள் மகன் பெரியசாமி என்பவர் வந்துள்ளார். இவர் தி.மு.க. ஆட்சியின் போது மாவட்டக் கவுன்சிலராக இருந்தவர். மாரிமுத்துவை வழிமறித்த பெரியசாமி, ஆபாசமாகப் பேசியுள்ளார். இந்த ஊரை போலீஸுக்கு காட்டிக் கொடுப்பவன் நீதான். உன்னையும், உன் சமுதாயத்தையும் நானும் என் பின்னால் இருப்பவர்களும் அழிக்காமல் விடமாட்டோம் என்று கூறி பயங்கரமாய் அடித்தாராம். அருகில் இருந்தவர்கள் விலக்கி விட்டுள்ளார்கள். என்றைக்கு இருந்தாலும் உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன் என்று கூறி பெரியசாமி மிரட்டியும் சென்றாராம்.

இது குறித்து மாரிமுத்து வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள பெரியசாமியை தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.