சென்னை பேருந்து நிலையத்தின் முன்பு, ஒரு மாநகரப் பேருந்து நடத்துனரை இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் அடித்ததால், அவர் பேருந்தை அப்படியே நிறுத்தினார். தொடர்ந்து, கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குள் செல்லும் அனைத்து பேருந்துகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
முன்னதாக இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் இருவரை ஒரு மாநகரப் பேருந்து உரசியபடி சென்றது. இதை அடுத்து அவர்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேருந்து நடத்துனரை இருவரும் அடித்ததாகத் தெரிகிறது. இதை அடுத்து, போவோர் வருவோர் எல்லாம் தங்களை அடித்து, காயப்படுத்தும் விதத்தில் பாதுகாப்பற்ற நிலையில் தாங்கள் பணி செய்வதா என்று கூறி, நடத்துனர்கள், ஓட்டுநர்கள் பேருந்துகளை அப்படி அப்படியே போட்டுவிட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் குறுக்கும் நெடுக்குமாக அனைத்து வாகனங்களும் அணி வகுத்து நின்றன., இதனால் எழுந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஆட்டோகள் கூட இயங்கமுடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணத்தால், பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர். நடத்துனரை அடித்த இருவரும் பிடிபட்டுள்ள நிலையில், போலீஸார் சமரசப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”இந்த தொண்டையோடு எப்புடிடா?” சீமானை பாடச் சொன்ன தொண்டர்கள்! | NTK

தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்
டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!

எடப்பாடியின் அரசியல் அனுபவம்: உதயநிதி விமர்சனம்!
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

