யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

அரசு நிலத்தில் அனுமதியின்றி கல்குவாரி அமைத்து ரூ.28.23 லட்சம் மோசடி

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி கல் உடைத்து, குவாரி நடத்தி அரசுக்கு ரூ.28.23 லட்சம்வரை இழப்பு

News image
Updated On :14 பிப்ரவரி 2013, 1:12 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி கல் உடைத்து, குவாரி நடத்தி அரசுக்கு ரூ.28.23 லட்சம்வரை இழப்பு ஏற்படுத்தியவர் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அயன்நாச்சியார்கோயில் கிராமத்திலிருந்து 1 கி.மீ. தூரத்தில் உள்ள வண்டிப்பாதையில் புல எண் 588/12, 588/14 என்ற இடத்தின் 9 கி.மீ. தெற்கே அரசு புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி, நாச்சியார்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் வாசுதேவன் என்பவர் 8.3.11-ம் தேதிக்கு முன்பு கல் உடைத்து குவாரி நடத்தி அரசுக்கு ரூ.28,23,695 அளவிற்கு இழப்பு ஏற்படுத்தினாராம். இதனை நாச்சியார்பட்டி, நடுத்தெருவைச் சேர்ந்த வீரப்பநாயக்கர் மகன் பாலகிருஷ்ணன் என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். அவருக்கு வாசுதேவன் கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.