சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் உதவித் தொகை கோரி போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ, மாணவிகள் இன்று தமிழக அரசின் உதவித் தொகை கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :15 பிப்ரவரி 2013, 7:05 am

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ, மாணவிகள் இன்று தமிழக அரசின் உதவித் தொகை கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கலை, அறிவியல், பிஎட், எம்பிஏ பயிலும் மாணவ, மாணவிகள் தங்களுக்கு தமிழக அரசு கல்வி உதவித் தொகை வழங்கக் கோரி வகுப்புகளைப் புறக்கணித்து இன்று துணைவேந்தர் வீட்டின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தைத் தொடர்ந்து துணைவேந்தர் எம். ராமநாதன், மாணவ, மாணவிகளிடம் பேசி, உதவித் தொகைப் பெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில், மாணவ, மாணவிகள் கலைந்து சென்றனர். இதனால் இன்று வகுப்புகள் எதுவும் நடைபெறவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.