யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஸ்ரீவிலி. அருகே இளம் பெண் தீக்குளித்து தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள இடையன்குளம், வேதக்கோயில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி மனைவி தரணி (38). இவர் சித்தாள் வேலைக்குச் சென்று வந்துள்ளார். பெருமாள்சாமி கட்டுக் குத்தகைக்கு நிலத்தை எடு்தது விவசாயம் செய்து வருகிறார். தன்னுடன் விவசாய வேலைக்கு வர வேண்டும் என்று பெருமாள்சாமி, தரணியை வற்புறுத்தினாராம்.

News image
Updated On :16 பிப்ரவரி 2013, 12:53 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்பத் தகராறில் இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள இடையன்குளம், வேதக்கோயில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி மனைவி தரணி (38). இவர் சித்தாள் வேலைக்குச் சென்று வந்துள்ளார். பெருமாள்சாமி கட்டுக் குத்தகைக்கு நிலத்தை எடு்தது விவசாயம் செய்து வருகிறார். தன்னுடன் விவசாய வேலைக்கு வர வேண்டும் என்று பெருமாள்சாமி, தரணியை வற்புறுத்தினாராம். இதில் மனம் உடைந்த தரணி வீட்டின் கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டு தனக்குத்தானே மண்ணெண்னை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தரணி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள மம்சாபுரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.