யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஸ்ரீவிலி. அருகே வீடு புகுந்து நகைகள் திருட்டு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சின்ன பண்டிதன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெ.ஞானவேல் (47). சமையல் மாஸ்டர். இவர் வேலைக்குச் சென்ற பின் மனைவி மற்றும்

News image
Updated On :23 பிப்ரவரி 2013, 1:28 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீடு புகுந்து நகைகளை திருடிச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சின்ன பண்டிதன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெ.ஞானவேல் (47). சமையல் மாஸ்டர். இவர் வேலைக்குச் சென்ற பின் மனைவி மற்றும் மகளும் வேலைக்குச் சென்று விட்டார்களாம். வீட்டின் சாவியை வீட்டின் கழிவு நீர் போகும் ஒரு குழாயில் மறைத்து வைப்பார்களாம். மனைவி வேலை முடிந்து வந்து வீட்டின் கதவை வழக்கம் போல் சாவி இருந்த இடத்திலிருந்து எடுத்து திறந்துள்ளார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு, லாக்கரில் இருந்த மூன்று பவுன் செயின், அரை பவுன் தோடு, அரை பவுன் மாட்டல் ஆகியவை காணாமல் போயிருந்தது தெரிய வந்தது.இது குறித்து ஞானவேல், மல்லி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.