ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மு.முத்துப்பாண்டி (30). இவரது ஆட்டோவில் பரமேஸ்வரி (38), சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சு.பால்ச்சாமி, தும்பையாபுரத்தைச் சேர்ந்த எஸ்.கந்தசாமி (58), கருப்பாயி (55) ஆகியோர் ஏறி அழகாபுரி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் வந்து கொண்டிருந்துள்ளனர். கிருஷ்ணன்கோவில் அருகே ஆட்டோ வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த அரசு போக்குவரத்துக் கழக பஸ் ஆட்டோவை முந்திச் செல்ல முயன்ற போது, ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ கவிழந்து, அதில் வந்த ஓட்டுநர் உள்ளிட்ட 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.