சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இன்டர்நெட் சேவை இணைப்பு துண்டிப்பு:மின் கட்டணம் வசூல் செய்ய முடியாமல் மின்வாரியம் திணறல்

தனியார் நிறுவன இன்டர்நெட் சேவை இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதால், மின் கட்டணம் வசூல் செய்ய முடியாமல் மின் வாரியம் திணறி வருகிறது.

News image
Updated On :2 ஜனவரி 2013, 4:02 am

எ.குணசேகரன்

தனியார் நிறுவன இன்டர்நெட் சேவை இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதால், மின் கட்டணம் வசூல் செய்ய முடியாமல் மின் வாரியம் திணறி வருகிறது.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் வசூல் செய்ய தனியார் நிறுவன இன்டர்நெட் சேவை இணைப்பு வழங்கப்பட்டு இருந்தது. அதற்குரிய சேவைக் கட்டணத்தை மின்வாரியம் பல மாதங்களாக செலுத்தாத காரணத்தால், அந்த நிறுவனம் கடந்த 25 ஆம் தேதி முதல் இன்டர்நெட் சேவையை நிறுத்திவிட்டது.

இதனால் மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் மின் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த டிச. 26 ஆம் தேதி புதன்கிழமை முதல் மின் நுகர்வோர், மின் இணைப்பு கட்டணத்தை வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் செலுத்தி வருகின்றனர்.

தபால் அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்த ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. மின் கட்டண உயர்வால் பாதிப்படைந்துள்ள நுகர்வோருக்கு சேவைக் கட்டணம் செலுத்துவது மூலமாக கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.

மின் கட்டண வசூல் மையம் இயங்காததால் குறிப்பிட்ட காலத்துக்குள் மின் கட்டணம் செலுத்தாத நுகர்வோரின் மின் இணைப்புகளை துண்டிக்காமலும், அபராதம் வசூலிக்காமலும் மின் கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசத்தை மின்சார வாரியம் அளிக்க வேண்டும் என்று, நுகர்வோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதேபோல (ஜன.12) முதல் 16 ஆம் தேதி வரை தொடர்ந்து 5 நாள்கள் பொங்கல் விடுமுறை வருவதால் மின் கட்டணத்தை செலுத்த முன்பு போல விடுமுறைக்கு பின்னர் ஒரு நாள் மின் கட்டணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.