திருநள்ளாறில் அரசுப் பேருந்து டயர் காற்றைத் திறந்துவிட்ட உதவி ஆய்வாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை திருநள்ளாறில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.
திருநள்ளாறில் இருந்து சென்னை செல்லும் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து வழக்கமாக பயணிகளை ஏற்றும் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், திருநள்ளாறுக்கு புதிதாக பொறுப்புக்கு வந்த உதவி ஆய்வாளர், பேருந்தை இங்கே நிறுத்தக் கூடாது என்று கூறி, பயணிகள் பேருந்தில் அமர்ந்திருக்கும்போதே, முன் டயர், பின் டயர் காற்றைத் திறந்துவிட்டுள்ளார். இதனை பேருந்து ஓட்டுநரிடம் பயணிகள் கூறியுள்ளனர். இதனால் பயணிகள் பெரிதும் கோபமடைந்தனர். தாங்கள் ஊருக்குச் செல்ல டிக்கெட் எடுத்துவிட்டு அமர்ந்திருக்கும்போது, காவல் உதவி ஆய்வாளர் இவ்வாறு செய்தது தவறு என்று கூறி, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.