இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி கடலூரில் நிருபர்களுக்கு அளித்தப் பேட்டியில்: மத்திய அரசின் திட்டங்களில் 100 நாள் வேலை உறுதித்திட்டம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. கிராமப் புறத்தில் சிறு பணி செய்யவேண்டும் என்று கூறி, அவர் வேலை செய்ததாகக் கருதி அவருக்கு ஊதியம் வழங்குகிறது. இதன்மூலம் 20 வயது பெண் முதல் 80 வயது மூதாட்டி வரை வருமானம் ஈட்டி வந்தனர். மத்திய அரசும் 100 நாள் வேலைத் திட்டத்துக்கு கேட்கிற நிதியை அளித்து வந்தது.கடந்த திமுக ஆட்சியின் போது, தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டதன் விளைவாக மத்திய அரசு தாராளமாக நிதி வழங்கியது. இந்தியாவிலேயே தமிழகம் இந்த நிதியை அதிகமாக பயன்படுத்தி வந்தது.