மாலையில், மதுரை, தமிழ்நாடு வர்த்தகச் சங்கத் தலைவர் என்.ஜெகதீசன் தலைமையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஓம்சக்தி ஹஸ்பிட்டாலிட்டீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.ஆர்.திருபொன்ராஜ், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் இணை ஆணையர் பி.ஜெயராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சென்னை கலாசாதனாலயா நடனமாமணி இசைச்செல்வர், நாட்டியகலாசிகாமணி ரேவதி ராமச்சந்திரன் குழுவினரின் மார்க்கம் என்ற நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் வி.பி.எம்.சங்கர், துணைத் தலைவர் வி.பி.எம்.எஸ்.தங்கபிரபு, தாளாளர் பழனிச்செல்வி, இணைத் தாளாளர் வி.பி.எம்.எஸ்.துர்காமீனலோஷினி, வாலாஜாபேட்டை எம்.எம்.குரூப்ஸ் தலைவர் டபிள்யூ.மகேந்திரவர்மன், இயக்குநர் எம்.கமல்ராகவன், சிந்துஜா மற்றும் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவிகள், ஏராளமான பெற்றோர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.