ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை 215 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 83 ஆயிரத்து 860 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் டி.எஸ்.ஸ்ரீதரன் வழங்கினார்.ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் த.ந.ஹரிரஹன்

News image
Updated On :5 ஜனவரி 2013, 2:21 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை 215 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 83 ஆயிரத்து 860 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் டி.எஸ்.ஸ்ரீதரன் வழங்கினார்.ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் த.ந.ஹரிரஹன் முன்னிலையில் இந்த உதவிகள் வழங்கப்பட்டது.

102 பேருக்கு முதியோர் உதவித் தொகை, 18 பேருக்கு முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் மற்றும் ஈமக்கிரியை உதவித் தொகை, நலிந்தோர் உதவித் திட்டத்தின் கீழ் 10 பேருக்கு உதவி, 50 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவு, 20 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, 10 பயனாளிகளுக்கு விலையில்லா வேஷ்டி, சேலைகள் ஆகிய அரசின் நலத்திட்ட உதவிகளை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் டி.எஸ்.ஸ்ரீதரன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜூ, கோட்டாட்சியர்கள் ரெங்கன், குணசேகரன், துணை ஆட்சியர் (சிறப்புத் திட்டங்கள்) ஜெயஸ்ரீ, தனித் துணை ஆட்சியர் மேரிபாய், உதவி இயக்குநர் பீபிஜான், வட்டாட்சியர் ஐ.திரௌபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.