சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் இன்று மாலை நேரிட்ட வெடி விபத்தில் 3 பேர் பலியானார்கள். 2 பேர் காயமடைந்தனர்.
சாத்தூர் அருகே சிந்தப்பள்ளியில் ரவீந்திரன் பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் வழக்கம் போல பட்டாசு தயாரிக்கும் பணி இன்று நடைபெற்று கொண்டிருந்தது. இந்த ஆலையில் 50 அறைகள் உள்ளன.
இதில், தரைச்சக்கர பட்டாசு தயாரிக்கும் ஒரு அறையில் மட்டும் வெடி மருந்துகள் உராய்வின் காரணமாக இன்று மாலை 4 மணியளவில் வெடி விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் ஒரு அறை முழுவதுமாக தரைமட்டமாயின. இதில் பணியாற்றிக் கொண்டிருந்த 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 2 பேர் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்த விருதுநகர் எஸ்.பி. மகேஸ்வரன், சாத்தூர் டிஎஸ்பி சின்னையா, சாத்தூர் தாசில்தார் மைக்கேல் ராஜ், சிவகாசி தனி தாசில்தார் சாந்தா ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
சாத்தூர் தீயணைப்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்
உயிரிழந்தவர்களில் ஒருவர் மேட்டமலைப் பகுதியைச் சேர்ந்த பொன்னுச்சாமி (50) என்பது தெரிய வந்துள்ளது, மற்ற இருவரது உடல்களும் அடையாளம் காணப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

