சிதம்பரம் அருகே உள்ள கே.ஆடூரைச் சேர்ந்த ஆசைத்தம்பி. இவரது மனைவி சுகந்தி கீரப்பாளையம் ஒன்றியக் கவுன்சிலராக உள்ளார். இவர் கீழநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சிவமாலாவிடம் சத்துணவுத்துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.25 ஆயிரம் வாங்கியதாக தெரிகிறது. வேலை வாங்கித் தராததால் சிவமாலா கணவர் அறிவழகனின் அண்ணன் அன்பழகன் சுகந்தியிடம் பணத்தை திருப்பி கேட்டபோது வன்கொடுமை சட்டத்தின் கீழ் புகார் கொடுத்து உள்ளே தள்ளிவிடுவேன் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அன்பழகன் கொடுத்த புகாரின் பேரில் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.