புவனகிரி அருகே உள்ள தெற்குதிட்டை கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (27). சிங்கப்பூரில் வேலை பார்க்கும் இவர் அண்ணன் திருமணத்தை முன்னிட்டு கடந்த சில தினங்கள் முன்பு இந்தியாவிற்கு வந்தார். இந்நிலையில் இன்று மாலை அண்ணன் சபரிராஜன் திருமண பத்திரிகையை உறவினர்களுக்கு கொடுப்பதற்காக தெற்குதிட்டையிலிருந்து உடையூர் கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது சாலையின் ஓரம் உள்ள பனை மரத்தில் மோதி, அருகே உள்ள வாய்க்காலில் விழுந்து சம்பவ இடத்திலேயே விஜயகுமார் இறந்தார். இதுகுறித்து புவனகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.