ருவாண்டோ நாட்டைச் சேர்ந்த ஜெரால்டு மகன் ஆலிவெர் முக்திசா (24). இவர் சிதம்பரம் சாந்திநகரில் வீடு எடுத்து தங்கி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.காம் முதலாண் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீஸார் நேற்று(ஜன.12) இரவு பஸ் நிலையத்தில் ரோந்து சென்ற போது பிறந்தநாள் கொண்டாடுவதற்காக மாணவர் ஆலிவெட் முக்திசாவிடமிருந்து அனுமதியின்றி புதுச்சேரியிலிருந்து 3 பெட்டியில் கொண்டு வந்த 70 பீர் பாட்டில்களை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் அம்மாணவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.