ரேஷன் அரிசியை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவிலில், தமிழக அரசு இலவசமாக வழங்கும் அரிசி, வியாபாரிகள் மூலம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது.உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் 15-ஆம் தேதி காட்டுமன்னார்கோவில், திருநீலகண்டன் தெருவைச் சேர்ந்த அப்பு (44), வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த ஐந்து மூட்டை ரேஷன் அரிசியை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து அப்புவை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.