கான்கிரீட் தளம் இடிந்து விழுந்து இளைஞர் பலி
கான்க்ரீட் தளம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் பலியானார்.


கான்க்ரீட் தளம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் பலியானார்.
பண்ருட்டியை அடுத்த கந்தரக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் அய்யனார். இவர் சென்ட்ரிங் போடும் வேலை செய்து வந்தார்.
கந்தரக்கோட்டையில் ராமலிங்கம் என்பவரது வீட்டில் போர்டிகோவில் அமைக்கப்பட்டிருந்த சென்ட்ரிங்கை புதன்கிழமை மதியம் பிரிக்கும் போது அந்த காங்கிரீட் தளம் இடிந்து விழுந்தது.
இதில், அய்யனாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, உடனடியாக அவர் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
இது குறித்து புதுக்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...