மதுரை பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர் இருவர் கைது
கடந்த ஜூலை 11ம் தேதி தூத்துக்குடிக்கு பள்ளிச் சுற்றுலா சென்றபோது, கடலில் மூழ்கி 4 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுக்க வில்லை எனக் கூறி, பெற்றோர் இன்று பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.









