கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பெங்களூரு இளைஞர் வேளாங்கண்ணியில் தற்கொலை

நாகை மாவட்டம், வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த பெங்களூரைச் சேர்ந்த ஒரு இளைஞர், விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

News image
Updated On :20 ஜூலை 2013, 5:43 pm

சங்கர்

நாகை மாவட்டம், வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த பெங்களூரைச் சேர்ந்த ஒரு இளைஞர், விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரு ஐ.டி காலணியைச் சேர்ந்த மூர்த்தி மகன் ரகு (21). இவர், கடந்த 17-ம் தேதி வேளாங்கண்ணி வந்து,  ஓர் தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கினார்.

வியாழக்கிழமை மாலை நீண்ட நேரமாகியும் அவரது அறைக் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், வேளாங்கண்ணி போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.

வேளாங்கண்ணி போலீஸார், விடுதி ஊழியர்களின் உதவியுடன் அறைக் கதவை உடைத்துத் திறந்த போது, ரகு அறையினுள் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.