டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மாணவர் காங்கிரஸ் தேர்தல்:வாசன் ஆதரவாளர்கள் அதிகளவில் வெற்றி

மாணவர் காங்கிரஸ் தேர்தலில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் ஆதரவாளர்கள் அதிகளவில் வெற்றிபெற்றனர்.மாணவர் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சுனில் ராஜா 1586 வாக்குகள்

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:56 pm

அரவிந்தன்

மாணவர் காங்கிரஸ் தேர்தலில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் ஆதரவாளர்கள் அதிகளவில் வெற்றிபெற்றனர்.மாணவர் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சுனில் ராஜா 1586 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.மாணவர் காங்கிரஸ் தலைவர் மற்றும் இதர பொறுப்புகளுக்கு மண்டல வாரியாக மறு தேர்தல்கள் நடைபெற்று வந்தன. சென்னை மண்டலத்துக்கு செவ்வாய்க்கிழமை தேர்தல் நடைபெற்றது.

பதிவான வாக்குகள் அனைத்தும் சென்னை சத்தியமூர்த்தி பவனுக்குக் கொண்டு வரப்பட்டு, புதன்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.இதில் பெரும்பாலான பதவிகளில் ஜி.கே.வாசனின் ஆதரவாளர்களே வெற்றி பெற்றனர்.துணைத் தலைவர் பதவிக்கு பாபு, ஈஸ்வரமூர்த்தி, அசோக்குமார், தினேஷ் கண்ணன், மாநிலப் பொதுச்செயலாளர் பதவிக்கு சபரிகணேஷ், ஜெயராஜ், மணிகண்டன், காளீஸ்வரி, மாநிலச் செயலாளர் பதவிக்கு பிரவீன், விக்ரமன், மணிகண்டன், ராது, தேசிய பிரதிநிதிகளாக மனோஜ், பிரவீன் ஆனந்த் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

மாநிலச் செயலாளர் பதவிக்கு ராது, ரஞ்சி என்ற இரட்டை சகோதரிகள் போட்டியிட்டனர். இதில் ராது வெற்றி பெற்றார்.வெற்றிபெற்ற அனைவரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகனிடம் வாழ்த்து பெற்றனர்.காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் கட்சியின் பெருமையைக் காப்பாற்றும் வகையிலும் அனைவரும் செயல்பட வேண்டும் என்று ஞானதேசிகன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.வெற்றி பெற்றவர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மூப்பனார் நினைவிடத்துக்குச் சென்று மலர் வளையம் வைத்து வெற்றிபெற்றவர்கள் மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.