மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடித்துவருகிறது.இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 47 மி.மீ மழையும், பாபநாசம் கீழ்அணையில் 20 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 15 மி.மீ மழையும்,மணிமுத்தாறு அணை பகுதியில் 18.6 மி.மீ மழையும், கடனாநதி அணையில் 9 மி.மீமழையும், ராமநதி அணையில் 6 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.இதேபோல் சேரன்மகாதேவியில் 3 மி.மீ மழையும், அம்பாசமுத்திரத்தில் 8.4மி.மீ மழையும் பெய்துள்ளது. மழை நீடித்து வருவதால் அணைகளின் நீர்வரத்து கணிசமாக வந்து கொண்டிருந்தது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 85 அடி கொள்ளளவு கொண்ட கடனாநதி அணையின் நீர்மட்டம் 84.50 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 350 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 850 கனஅடி தண்ணீர் கருணை அற்றில் திறந்து விடப்படுகிறது.