பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கடையநல்லூரில் இந்துமுன்னணி நிர்வாகிகள் மீது தாக்குதல்:மூன்று பேர் கைது

முத்துக்கிருஷ்ணாபுரம்,இல்லத்தார் தெற்குத் தெருவைச் சேர்ந்த ராசித்(21),அப்துல்குத்தூஸ்(21),முகம்மதுஇர்பான்(19),நவாஸ்(20) ஆகியோருக்கும்,அதே தெருவைச் சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகிகள்

News image
Updated On :25 ஜூலை 2013, 10:43 am

குமார முருகன்

கடையநல்லூரில் இந்து முன்னணி நிர்வாகிகளை தாக்கிய 3 பேர்களை போலீஸார் இன்று கைது செய்தனர்.

முத்துக்கிருஷ்ணாபுரம்,இல்லத்தார் தெற்குத் தெருவைச் சேர்ந்த ராசித்(21),அப்துல்குத்தூஸ்(21),முகம்மதுஇர்பான்(19),நவாஸ்(20) ஆகியோருக்கும்,அதே தெருவைச் சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகிகள் கணேசன்(23),மகாராஜன்(25) ஆகியோருக்கும் இடையே புதன்கிழமை இரவு பிரச்னை ஏற்பட்டதாம்.இதில் கணேசன் மற்றும் மகாராஜன் ஆகிய இரண்டு பேரையும்,எதிர்தரப்பைச் சேர்ந்த 4 பேரும் தாக்கினார்களாம்.இதில் காயமடைந்த கணேசன் மற்றும் மகாராஜன் ஆகிய இருவரும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையிóல் புற நேயாளிகளாக சிகிச்சை பெற்றனர்.

இது தொடர்பான புகாரின் பேரில் கடையநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி,உதவி ஆய்வாளர் சிவன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ராசித்,அப்துல்குத்தூஸ்,முகம்மதுஇர்பான் ஆகிய 3 பேரையும் இன்று கைது செய்தனர்.தலைமறைவாகி விட்ட நவாசை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.