கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வேளாங்கன்னி கடலில் மூழ்கி 3 பேர் பலி

வேளாங்கண்ணி கடலில் குளித்த சுற்றுலா பயணிகள் 3 பேர் உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் பேருந்து மூலம் வேளாங்கன்னிக்கு

News image
Updated On :27 ஜூலை 2013, 12:47 pm

சங்கர்

வேளாங்கண்ணி கடலில் குளித்த சுற்றுலா பயணிகள் 3 பேர் உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் பேருந்து மூலம் வேளாங்கன்னிக்கு சுற்றுலா வந்தனர்.இதில் பெரும்பாலானோர் இன்று பிற்பகல் வேளாங்கன்னி கடலில் குளித்தனர்.அப்போது சரவணன்(36) ,தங்கராஜ்(37), பூபதி(20) ஆகிய மூவரும் கடலில் மூழ்கினர்.உடனிருந்தவர்கள் மற்றும் மீனவர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சில மணி நேரங்களுக்கு பிறகு கடற்கரையில் மூவர் உடலும் கரை ஒதுங்கியது.இது குறித்து கிழையூர் கடற்கரை காவல் நிலைய போலீஸார் விசாரணை  நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.