வேலூர் மாவட்டம் ஆம்பூரில் வனப்பகுதிக்குள் யானையை விரட்டுவதற்காக வனத்துறையினர் சென்றனர். அப்போது, வனத்துறையினரைக் கண்டு அந்தப் பகுதியில் சந்தனக் கட்டை கடத்திச் சென்ற ஆண்கள் 5 பேர் தப்பி ஓடினர். அந்தக் குழுவில் இருந்த ஒரு பெண்ணைப் பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து 10 கிலோ சந்தனக் கட்டை பறிமுதல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.