லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகர் அருகே கார் விபத்து: 2 பேர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊரைச் சேர்ந்த 4 பேர் ஒரு இண்டிகா காரில் சாத்தான்குளம்- முதலூர் கிராமத்துக்கு சாமி கும்பிடச்

Updated On :1 ஜூன் 2013, 4:20 am

விருதுநகர் அருகே நிகழ்ந்த கார் விபத்தில் 2 பேர் பலியாயினர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊரைச் சேர்ந்த 4 பேர் ஒரு இண்டிகா காரில் சாத்தான்குளம்- முதலூர் கிராமத்துக்கு சாமி கும்பிடச் சென்றனர். நேற்று இரவு தங்கள் ஊரில் இருந்து கிளம்பி இன்று காலை 7.30க்கு விருதுநகர் மாவட்டம் மரனூத்து பட்டம்புதூர் இடையே உள்ள பாலத்தின் அருகே வந்த போது, கார் ஓட்டுநர் சற்று கண் அசந்தாராம்.

அப்போது கார் பாலத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில், அந்தோணிராஜ்(45), உஷாராணி இருவரும் உயிரிழந்தனர். இவர்களின் மகன், மகள், ஓட்டுநர் ஜெகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விபத்து குறித்து

வத்தகாரப்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.