கீழணையிலிருந்து திறந்துவிடப்படும் நீர் வடக்குராஜன் வாய்க்கால் வழியாக வந்து சிதம்பரம் அருகே குமராட்சி கோப்பாடி மதகு அருகே, கான்சாகிப் வாய்க்காலாக பிரிகிறது. இந்த கான்சாகிப் வாய்க்கால் குமராட்சியில் தொடங்கி கிள்ளை பொன்னந்திட்டு வெள்ளாறு வரை சுமார்41.25 கி.மீ நீளம் உடையது. இந்த வாய்க்கால் முழுவதும் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து வாய்க்கால் தூர்ந்து போய் உள்ளது. கான்சாகிப்வாய்க்கால் மூலம் சிதம்பரத்தின் கிழக்கு பகுதியில் உள்ள கவரப்பட்டு, சித்தலாப்பாடி, நஞ்சமகத்துவாழ்க்கை, புஞ்சமகத்துவாழ்க்கை, நக்கரவந்தன்குடி, கொடிப்பள்ளிம, பின்னத்தூர், தில்லைவிடங்கன், கீழச்சாவடி, கிள்ளை, பொன்னந்திட்டு உள்ளிட்ட 20 வருவாய் கிராமங்களில் உள்ள 94410 ஏக்கர் நிலங்கள் கான்சாகிப் வாய்க்காலின் 34 மதகுகள் மூலம் பாசனம் பெறுகிறது. ஆனால் இந்த ஆண்டு கோடைக்காலத்தில் கான்சாகீப் வாய்க்காலில் உள்ள ஆகாயத் தாமரை அகற்றப்படாததாலும், மராமத்து பணிகளை நடைபெறாததாலும் கடந்த ஆண்டு வறட்சியை சந்தித்து சிதம்பரம் கிழக்கு பகுதி விவசாயிகள் வரும் ஆண்டு வெள்ளத்தை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.