அருப்புக்கோட்டை அருகே தூங்கிக் கொண்டிருந்த போது விளக்கை தட்டியதால் கவிழ்ந்து சேலையில் தீப்பிடித்ததில் மூதாட்டி படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே மலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ்(52). இவரின் தாயார் ராஜலட்சுமி(80). கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு இதே பகுதியில் இருக்கும் மகள் வீட்டிற்குச் சென்றார். அங்கு வழக்கம்போல் நேற்று(திங்கள்கிழமை) இரவு வீட்டில் தூங்கியுள்ளனர். அப்போது, எதிர்பாரத விதமாக அருகில் இருந்த மண்ணெண்ணெய் விளக்கை தட்டிவிட்டாராம். அப்போது, சேலையில் தீப்பிடித்து எரிந்ததால் படுகாயம் அடைந்தார்.
பின்னர், உடனே அருகில் உள்ள அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்து மதுரைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலையில் உயிரிழந்தார். இது தொடர்பாக மூதாட்டியின் மகன் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

