நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற கார் ஒன்று நாங்குனேரி அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாடை இழந்து பள்ளி மாணவர்கள் மீது மோதி,பின் அருகில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் நாங்குனேரியைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு படித்து வந்த கந்தையா மகன் சுரேஷ்கண்ணன் மற்றும் கார் டிரைவர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.