இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நீர்பிடிப்பு பகுதியில் மழை, அருவியில் வெள்ளம்: சேர்வலாறு அணை 100 அடியை நெருங்கிறது

தென்மேற்கு பருவ மழை தொடங்கி பெய்து வருவதால் திருநெல்வேலி மாவட்டத்தில்உள்ள அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. 48 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் கடந்த 2 வாரங்களில்

News image
Updated On :16 ஜூன் 2013, 8:36 am

ஷேக் அப்துல்காதர்

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. 153 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம்  100 அடியை நெருங்கிறது.

தென்மேற்கு பருவ மழை தொடங்கி பெய்து வருவதால் திருநெல்வேலி மாவட்டத்தில்உள்ள அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. 48 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் கடந்த 2 வாரங்களில் 30 அடி உயர்ந்து இன்று பிற்பகல் நிலவரப்படி 79.00 அடியாக இருந்தது.ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு3445.49 கனஅடி வந்து கொண்டிருந்தது. அணையில் 35 மி.மீ மழையும், பாபநாசம் கீழ் அணையில் 4 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 9 அடி உயர்ந்து 100 அடியை நெருங்கிறது.அணையின் நீர்வரத்து சுமார் 3,000 அடியாக இருந்தது. அணையில் 12 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 70.65 அடியாக இருந்தது.அணையில் 9.4 மி.மீ மழை பெய்துள்ளது.கடனாநதி அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 56.50 அடியாகவும், ராமநதி அணைநீர்மட்டம் 2 அடி உயர்ந்து 66.00 அடியாகவும் இருந்தது. கடனாநதி அணைக்கு விநாடிக்கு 191 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 70 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. கடனாநதி அணையில் 10.4 மி.மீ மழையும், ராமநதி அணையில் 2 மி.மீ மழையும், அம்பாசமுத்திரத்தில் 7.3 மி.மி மழையும்,சேரன்மகாதேவியில் 7 மி.மி மழையும் பதிவாகியுள்ளது.

நீர்பிடிப்பு பகுதியில் நீடித்து வரும் மழையால் மணிமுத்தாறு, பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மணிமுத்தாறு அருவியில் இன்று பகலில் வெள்ளப்பெருக்கு இருந்தது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.