பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கடையநல்லூரில் கணவன் - மனைவி தீக்குளிக்க முயற்சி

துப்புரவுப் பணியாளர் தேர்வுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் வேலைக்கு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கணவன் மனைவி இருவரும் கடையநல்லூர் நகராட்சி அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

News image
Updated On :20 ஜூன் 2013, 1:39 pm

குமார முருகன்

துப்புரவுப் பணியாளர் தேர்வுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் வேலைக்கு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கணவன் மனைவி இருவரும் கடையநல்லூர் நகராட்சி அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

கடையநல்லூரைச் சேர்ந்தவர்கள் கருப்பசாமி (37), வசந்தி (32).

வசந்திக்கு துப்புரவுப் பணியாளர் பணியிடத்துக்கு நேர்முகத்துக்கான அழைப்பு வந்து, 10 நாட்களுக்கு முன்னர் அதில் கலந்து கொண்டார். ஆனால், அவருக்கு பணியிடம் வழங்கப்படும் வாய்ப்பு மறுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதை அடுத்து, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்த படி, பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால், இது நடக்கவில்லை என்பதால், இன்று கணவன் மனைவி இருவரும் நகராட்சி அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்சி செய்தனர். காவல் ஆய்வாளர் சபாபதி அவர்களைத் தடுத்து அனுப்பினார். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.